ஆப்நகரம்

ரயில்கள், ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு

நாட்டில் உள்ள 11 ஆயிரம் ரயில்கள் மற்றும் 8 ஆயிரத்து 500 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான அறிவிப்பு பட்ஜெட் தாக்குதலின்போது வெளியாக உள்ளது.

Samayam Tamil 23 Jan 2018, 6:37 am
நாட்டில் உள்ள 11 ஆயிரம் ரயில்கள் மற்றும் 8 ஆயிரத்து 500 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான அறிவிப்பு பட்ஜெட் தாக்குதலின்போது வெளியாக உள்ளது.
Samayam Tamil budget 2018 all 11000 trains 8500 stations to have cctv surveillance
ரயில்கள், ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு


வருகிற பிப்ரவாி 1ம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில் ரயில்வே துறையில் பாதுகாப்புகளை அதிகாிக்கும் விதமாக கண்காணிப்பு கேமராக்களை பொறுத்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. அதன்படி நாட்டில் 11 ஆயிரம் ரயில்கள் மற்றும் 8 ஆயிரத்து 500 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் சுமாா் 395 ரயில் நிலையங்களிலும், 50 ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளன. மேலும் ரயில்களின் ஒவ்வொரு பெட்டியிலும் 8 கேமராக்கள் வரை பொறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 12 லட்சம் கேமராக்கள் வாங்கப்பட உள்ளன.

கடந்த ஆண்டில் அதிக அளவிலான ரயில் விபத்துகள் நடைபெற்றுள்ளதால் அதனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு அதிக அளவிலான நிதியை ரயில்வே துறைக்கு ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆள் இல்லா லெவல் கிராசிங்குகள் அருகில் பாலங்கள் அமைப்பதற்காகவும், பழைய தண்டவாளங்களை மாற்றியமைக்கவும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட உள்ளது. வருகிற 2020ம் ஆண்டுக்குள் ஆள் இல்லா ரயில்வே கிராசிங்கள் இல்லை என்ற நிலையை உருவாக்க மத்திய அரசு திட்டம் தீட்டி வருவதாக மத்திய அரசு சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி