ஆப்நகரம்

சாலையில் திடீரென கொட்டிய பண மழை; கட்டு கட்டாய் அள்ளிச் சென்ற மக்கள்!

நடந்து சென்று கொண்டிருந்த போது, சாலையில் பண மழை கொட்டினால் என்ன செய்வீர்கள்? அப்படியொரு சம்பவம் கொல்கத்தாவில் நடந்த போது பொதுமக்கள் செய்த காரியத்தை பாருங்கள்.

Samayam Tamil 21 Nov 2019, 9:16 am
நடந்து சென்று கொண்டிருந்த போது, சாலையில் பண மழை கொட்டினால் என்ன செய்வீர்கள்? அப்படியொரு சம்பவம் கொல்கத்தாவில் நடந்த போது பொதுமக்கள் செய்த காரியத்தை பாருங்கள்.
Samayam Tamil bundles of currency notes were thrown from a building in kolkata
சாலையில் திடீரென கொட்டிய பண மழை; கட்டு கட்டாய் அள்ளிச் சென்ற மக்கள்!


வருமான வரி சோதனை

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அரசுக்கு முறையாக வரி செலுத்தாமல் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபடும் நபர்களை கையும், களவுமாக பிடிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் சோதனை

தமிழகத்திலும் வருமான வரித்துறை சோதனைகள் அதிகரித்துள்ளன. அதற்கு உதாரணமாக சமீபத்தில் நீட் பயிற்சி மையம், தனியார் பள்ளிகள், கொசுவலை தயாரிக்கும் நிறுவனம் உள்ளிட்டவற்றில் சோதனை நடத்தி கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதை காணலாம்.

கொல்கத்தாவில் சோதனை

இந்நிலையில் மேற்குவங்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய சம்பவத்தில் ஆச்சரியப்படும் நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள பென்டின்க் சாலையில் ஹாக் மெர்கன்டைல் என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏற்றுமதி - இறக்குமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

Twitter-#WATCH Bundles of currency notes were thrown from ...

பண மழை

இங்கு வருமான வரித்துறையினர் நேற்று அதிரடியாக சோதனையில் இறங்கினர். அப்போது அந்த கட்டிடத்தின் 6வது மாடியில் இருந்து ரூ.100, ரூ.500, ரூ.2000 நோட்டுகள் வெளியே சிதறியுள்ளன. இது பார்ப்பதற்கு வானத்தில் இருந்து பண மழை பொழிவதை போன்று காட்சி அளித்துள்ளது.

போலீசார் விசாரணை

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் ஓடி வந்து கையில் கிடைத்த பணத்தை அப்படியே அள்ளிச் சென்றனர். இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது. வருமான வரித்துறை சோதனைக்கு பயந்து சம்பந்தப்பட்ட நிறுவன ஊழியர்கள் ரூபாய் நோட்டுகளை மாடியில் இருந்து வீசியுள்ளனரா என்று உறுதியாக தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி