ஆப்நகரம்

பள்ளத்தில் உருண்டு ஓடிய பேருந்து- காஷ்மீர் விபத்தில் 33 பேர் பலியான சோகம்!

காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 1 Jul 2019, 11:45 am
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டம் கேஷ்வன் என்ற இடத்தில் இருந்து மினி பேருந்து ஒன்று புறப்பட்டது. அதில் ஏராளமான பயணிகளை கிஷ்த்வாருக்கு பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் பேருந்து கிஷ்த்வார் அருகே வந்தது.
Samayam Tamil Kashmir Accident


அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை பேருந்து இழந்தது. இதனால் தறிகெட்டு ஓடி, அருகே இருந்த பள்ளத்தில் விழுந்தது. அப்போது உருண்டோடிய பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் கூச்சலிட்டனர்.

இதையடுத்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தின் உள்ளே நசுங்கி 33 பேர் உயிரிழந்துள்ளனர். 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து ஓடி வந்த அப்பகுதி மக்கள், மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி