ஆப்நகரம்

திருப்பதி அருகே விபத்து: மூன்று பேர் பலி, 36 பேர் காயம்!

திருப்பதி அருகே அரசுப் பேருந்து, தனியார் சுற்றுலா பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 36 பேர் படுகாயமாடைந்துள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

Samayam Tamil 8 Jan 2020, 12:33 pm
விஜயவாடாவில் இருந்து சித்தூர் மாவட்டத்தின் குப்பம் சென்றுகொண்டிருந்த ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகத்தின் அமராவதி சொகுசுப் பேருந்தும், சபரி மலையில் இருந்து தெலுங்கானா மாநிலம் நலகொண்டாவுக்கு பக்தர்களுடன் சென்றுகொண்டிருந்த தனியார் சுற்றுலா பேருந்தும் திருப்பதி அருகே உள்ள காசிபெண்ட்லா அருகில் இன்று அதிகாலை ஐந்தரை மணியளவில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
Samayam Tamil திருப்பதி அருகே விபத்து


பொங்கல் விடுமுறை: இத்தனை சிறப்பு ரயில் இருக்கு.. உடனே புக் பண்ணுங்க!

படுபயங்கர வேகத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் அரசுப் பேருந்தின் ஓட்டுனர், பயணிகளுக்கான உதவியாளர் உட்பட மூன்று பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இரண்டு பேருந்துகளில் இருந்த 36 பேர் படுகாயமடைந்து பேருந்துகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

முடங்கியது, புதுச்சேரி... பள்ளி, கல்லூரிகள் விடுமுறை...

விபத்து பற்றிய தகவல் அறிந்த பூத்தட்டு போலீஸார் விரைந்து சென்று கேஸ் கட்டர்கள் மூலம் பேருந்துகளின் கதவுகளை வெட்டித் திறந்து படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ்கள், மினி லாரிகள் ஆகியவற்றில் ஏற்றி சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

பாரத் பந்த்: தொடங்கியது வேலைநிறுத்தப் போராட்டம்; செவிசாய்க்குமா மத்திய அரசு?

போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அரசு வால்வோ பேருந்து மிதமிஞ்சிய வேகத்தில் ஓட்டிச் செல்லப்பட்டது விபத்துக்கான முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி