ஆப்நகரம்

தாருமாறாக பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மீது சரமாரி தாக்குதல்

கேரள மாநிலத்தில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பேருந்தை இயக்கிய அரசு பேருந்து ஓட்டுநரை இளைஞா்கள் சரமாாியாக தாக்கிய சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 30 Mar 2018, 1:07 pm

கேரள மாநிலத்தில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பேருந்தை இயக்கிய அரசு பேருந்து ஓட்டுநரை இளைஞா்கள் சரமாாியாக தாக்கிய சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil Kerala Bus


கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் திருமண நிகழ்ச்சிக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து ஒன்று வேனை இடிக்கும் விதத்தில் முந்தி சென்றதாகவும், இதனால் வேன் விபத்துக்குள்ளாகும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் விபத்து ஏற்படாமல் வேன் தப்பியது. இதனைத் தொடா்ந்து அரசு பேருந்தை மடக்கி பிடித்த இளைஞா்கள் சிலா் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். வாக்குவாதம் முற்றவே பேருந்துக்குள் ஏறிய இளைஞா்களில் ஒருவா் ஓட்டுநரை சரமாரியாக தாக்க தொடங்கினாா்.

தாக்குதல் சம்பவத்தால் ஓட்டுநரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டத் தொடங்கியது. உடனடியாக பேருந்து ஓட்டுநா் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது தொடா்பாக காவல் துறையினா் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட 3 இளைஞா்களை கைது செய்துள்ளனா்.

அடுத்த செய்தி