ஆப்நகரம்

குடியுரிமைச் சட்டத்தால் உ.பி.யில் பதற்றம், 14 பேர் பலி சண்டை தொடர்கிறது!

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில், உத்திர பிரதேசத்தில் போராட்டம் மிகவும் தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

Samayam Tamil 21 Dec 2019, 7:29 pm
மத ரீதியாகக் குடியுரிமை சட்டத் திருத்தம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம் இன்று மிகவும் தீவிரமடைந்துள்ளது. நாடு முழுவதிலும் இந்தப் போராட்டங்களில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். குறிப்பாக உத்திர பிரதேசத்தில் மட்டும் 14 பேர் பலியாகியுள்ளனர்.
Samayam Tamil images (18)


உத்திர பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 14 பேர் உயிரிழந்தது உள்ளனர் என, அம்மாநில காவல் துறை அறிவித்துள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த 14 பேரும் காவல் துறையினர் நடத்திய தாக்குதலில் சிக்கி உயிரிழந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

போராட்டம் ஒருபுறம்... மோடி அமைச்சர்களோடு வேற டிஸ்கசன்!

மாநில காவல் துறையால் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவி வருவதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் கூறுகின்றன. உத்திர பிரதேசம், லக்னோவில் போராட்டம் மிகவும் தீவிரமடைந்துள்ளது.

போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் அந்த மாநிலத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

போராட்டம் காரணமாக உத்திர பிரதேச அரசு மாநிலத்தில் பல்வேறு இடங்களில் செல்போன் சேவை, இணையதள சேவையைத் துண்டித்து உள்ளது. இதன் காரணமாகவும், பலர் தங்கள் உறவினர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம்: மலேசிய பிரதமர் அதிருப்தி; இந்தியா கண்டனம்!

இந்த நிலை தொடரும் என மாநில அரசு அஞ்சுவதாகக் செய்திகள் கூறுகின்றன. உத்திர பிரதேசத்தில் இந்த 3 நாட்களில் மட்டுமே 11 பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து நெட்டிசன்கள், “பாஜகவின் மதவாத அரசியலுக்காக, மக்களைப் பலி கொடுக்கிறது” என விமர்சித்து வருகின்றனர்.

இந்த தகவல்களைத் தவிர மேலும் பல அசம்பாவிதங்கள் உத்திர பிரதேசத்தில் நடப்பதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் காவல் துறை வீடு வீடாகத் தேடி சித்திரவதைக்கு ஆளாக்குவதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி