ஆப்நகரம்

நாடு முழுவதும் புதிதாக 75 மருத்துவக் கல்லூரிகள் - ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை!

புதிதாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 28 Aug 2019, 8:00 pm
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாடு முழுவதும் புதிதாக 75 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
Samayam Tamil Prakash Javadekar


இது 2021-22ஆம் கல்வி ஆண்டில் இருந்து செயல்பாட்டிற்கு வரும். இதன்மூலம் நாடு முழுவதும் 15,700 எம்.பி.பி.எஸ் சீட்கள் அதிகரிக்கப்படும். மேலும் மிதமிஞ்சிய சர்க்கரையை ஏற்றுமதி செய்வதற்கான திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஐமுகூ-2 சறுக்கலுக்கு இவர் தான் காரணம்- பகிரங்கமாக போட்டு உடைத்த வீரப்ப மொய்லி!

இதற்கான மானியமாக ரூ.6,268 கோடி ஒதுக்கீடு செய்யவும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். நடப்பு 2019-20 நிதியாண்டில் இந்தியாவில் இருந்து 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

சிதம்பரத்தை நாளை காலை வரை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு தடை!!

பேரிடர் தடுப்பு உள்கட்டமைப்புக்கு சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து கட்டமைப்பை உருவாக்க ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. இதனை வரும் செப்டம்பர் 23ஆம் தேதி நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா பருவகால மாநாட்டில் பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் எனக் குறிப்பிட்டார்.

சிதம்பரம் அறிவாளி, சாதுர்யமானவர்: அமலாக்கத்துறை விவாதம்!!

அடுத்த செய்தி