ஆப்நகரம்

SC ST Act: எஸ்.சி, எஸ்.டி. சட்டத்திருந்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

எஸ்சி, எஸ்டி சட்டத்தில் மீண்டும் கடுமையான பிரிவுகளைச் சேர்க்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Samayam Tamil 2 Aug 2018, 10:43 am
டெல்லி: எஸ்சி, எஸ்டி சட்டத்தில் மீண்டும் கடுமையான பிரிவுகளைச் சேர்க்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
Samayam Tamil 65227956


டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் கடுமையான பிரிவு நீக்கப்பட்டதை மாற்ற அமைக்கும் புதிய சட்டதிருத்த மசோதா பற்றி ஆலோசனை நடந்துள்ளது. இதில் அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது.

இது எஸ்சி, எஸ்டி சட்டத்தில் கடுமையான பிரிவுகள் மீண்டும் இடம்பெற வழிவகுக்கும். இதனை நடப்பு மழைக்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் குற்றம்சாட்டப்படுவோரை முதல்கட்ட விசாரணை எதுவுமின்றி உடனடியாக கைது செய்ய தடை விதித்து உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச்சில் தீர்ப்பளித்தது. மேலும், குற்றம்சாட்டப்பட்டவர் முன்ஜாமீன் பெறுவதற்கும் வழிவகை செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து பல்வேறு தரப்பினரின் போராட்டத்தின் எதிரொலியாக மத்திய அரசு இந்த மசோதாவை கொண்டுவருகிறது.

அடுத்த செய்தி