ஆப்நகரம்

புதியதாக 10 அணுமின் நிலையங்களை நிறுவ மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாடு முழுவதும் புதியதாக 10 அணுமின் நிலையங்களை நிறுவ மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

TNN 18 May 2017, 7:35 am
நாடு முழுவதும் புதியதாக 10 அணுமின் நிலையங்களை நிறுவ மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
Samayam Tamil cabinet clears proposal to build 10 nuclear power plants
புதியதாக 10 அணுமின் நிலையங்களை நிறுவ மத்திய அமைச்சரவை ஒப்புதல்


இதன்படி, தலா 700 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 10 அணுமின் நிலையங்கள் பல்வேறு இடங்களிலும் ஏற்படுத்தப்பட உள்ளன. அவை அனைத்தும், கனரக அணு உலைகள் கொண்டதாக இருக்கும். இதனால், நாட்டின் ஒட்டுமொத்த அணுமின் உற்பத்தியில், கூடுதலாக 7000 மெகாவாட் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் இந்த அணுமின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளிநாட்டின் உதவியின்றி, உள்நாட்டிலேயே அதிலும் குறிப்பாக, இந்திய தொழில்நுட்பத்திலேயே இந்த அணு உலைகள் தயாரிக்கப்பட உள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

தற்போதைய நிலையில், நாடு முழுவதும் 22 அணுமின் உற்பத்தி உலைகள் இயங்கிவருகின்றன. இதில், கூடங்குளம் அணுமின் நிலையம், ராஜஸ்தான் அணுமின் நிலையம் உள்ளிட்டவற்றில் புதிய உலைகள் நிறுவும் பணிகள் நடைபெறுகின்றன. இந்த பணிகள், 2022ம் ஆண்டுக்குள் நிறைவடையும்.

அதேசமயம், புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்தி திட்டங்களில் கவனம் செலுத்தாமல், புதியதாக அணுமின் நிலையங்கள் நிறுவுவது தேவையற்ற செயல் என்று, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

The Union Cabinet cleared on Wednesday the building of 10 new nuclear power plants to add 7000MW to India's nuclear power generation capacity.

அடுத்த செய்தி