ஆப்நகரம்

இரு தலைகளுடன் பிறந்த கன்றுவை பார்க்க குவியும் ஊர் மக்கள்..!

ஆந்திரா அருகே இரு தலைகளுடன் பிறந்த கன்று குட்டியை அப்பகுதி மக்கள் அனைவரும் அதிசயமாக பார்த்து விட்டு செல்கின்றனர்.

Samayam Tamil 11 Jun 2020, 6:19 pm
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் ருத்ரவரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வர ராவ் என்ற விவாசாயி, எருமை, பசு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த இவரது எருமை தற்போது கன்று குட்டியை போட்டுள்ளது.
Samayam Tamil two headed calf at andhra


அந்த கன்று இரண்டு தலைகளோடு பிறந்ததால் விவசாயிக்கு ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் கோயில் பூசாரிகள் சிலர், கன்றுவை ஆச்சரியத்தோடு பார்த்து கடவுளின் பேரால் இது நடந்துள்ளது என கூறுகின்றனர்.

சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதியில்லை..! கோயில் திருவிழாவும் ரத்து...

இயற்கையின் படைப்பினால் பிறக்கும் எந்த உயிரினத்தின் நிறைக்கும், குறைக்கும் டிஎன்ஏவே பொறுப்பாகும் என அறிவியல் கூறுகிறது. ஆனால், சமூகத்தில் ஒரு பிறப்பில் குறை இருந்தால் அது பரம்பரை செய்த பாவம் என்றும், கூடுதல் உறுப்புகளுடன் பிறந்தால் அது ராசி என்றும் சிலரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. என்ன எதுவோ, உலகில் இரு தலைகளுடன் ஒரு விலங்கு பிறப்பது வாடிக்கைதான்.

இதேபோல கடந்த 2018 ஆம் ஆண்டு முல்லைத்தீவு புளியங்குளம் கிராமத்தில் பசு கன்று இரு தலைகளுடன் பிறந்து பின்னர் இறந்துபோனதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி