ஆப்நகரம்

டிராய் தீர்ப்பில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

அழைப்புகள் தானாக துண்டிக்கபட்டால் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் உத்தரவிற்கு இடைகால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

TNN 4 Mar 2016, 3:38 pm
புதுதில்லி: அழைப்புகள் தானாக துண்டிக்கபட்டால் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் உத்தரவிற்கு இடைகால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
Samayam Tamil call dropping case sc
டிராய் தீர்ப்பில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு


வாடிக்கையாளர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென தொடர்பு துண்டிக்கப்படும் அழைப்புகளுக்கு தொலைபேசி சேவை நிறுவனங்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டிருந்தது.

இதற்கு எதிராக இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம், மற்றும் ஏர்செல் , ஏர்டெல் உள்ளிட்ட 21 நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் உத்தரவிற்கு இடைகால தடை விதிக்க வேண்டும் என தொலை தொடர்பு நிறுவனங்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் இது தொடர்பாக பதிலளிக்குமாறு டிராய்க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பிறகு வழக்கின் விசாரணையானது வரும் மார்ச் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்த செய்தி