ஆப்நகரம்

எடப்பாடியை ராஜினாமா செய்ய வைக்க முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியின் ஐடியா

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ராஜினாமா செய்ய வைப்பது உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி தென் மாநிலங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ அழைப்புவிடுத்திருக்கிறார்.

TNN 5 Mar 2017, 6:57 pm
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ராஜினாமா செய்ய வைப்பது உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி தென் மாநிலங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ அழைப்புவிடுத்திருக்கிறார்.
Samayam Tamil cant accept jailbird sasikalas puppet palaniswami as cm justice markandey katju
எடப்பாடியை ராஜினாமா செய்ய வைக்க முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியின் ஐடியா


முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தென் மாநிலங்களின் நலனைக் கருத்தில் கொண்டு வழக்கறிஞர்கள் நாளை (மார்ச் 6) முதல் போராட்டம் நடத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் விரிவாக எழுதியுள்ளார்.

1. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநில உயர்நீதிமன்றங்களைப் போல தென் மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களிலும் அந்தந்த மாநிலங்களின் மொழிகளை வழக்காடு மொழியாக அறிவித்தல்

2. அரசியலமைப்புச் சட்டத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்தின் கிளையை தென் மாநிலங்களில் ஒன்றில் அமைத்தல்


3. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக சிறை சென்றுள்ள சசிகலாவின் பினாமியாக செயல்பாடும் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதிவியிலிருந்து ராஜினாமா செய்ய வைத்தல்

4. ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை அது குறித்த உரிய அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் வரை நிறுத்திச் செய்தல்


ஆகிய நான்கு கோரிக்கைகளை வழக்கறிஞர்கள் தங்கள் போராட்டத்தில் வலியுறுத்த வேண்டும் என்கிறார் கட்ஜூ. இந்தப் போராட்டத்தின் குறியீடாக வழக்கறிஞர்கள் வெண்ணிறத்தில் பேண்ட் (White Band) அணிந்துகொள்ள வேண்டும். அதனை போராட்டம் வெற்றி பெறும் வரை கழற்றக்கூடாது என்றும் கட்ஜூ பரிந்துரைத்துள்ளார்.

மேலும், தமிழக முதல்வராக நேர்மையான நபர் ஒருவரே இருக்க வேண்டும் என்றும் அதற்குத் தகுதியானவர் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. ஆர்.நடராஜ் தான் என்பதே தன் கருத்து என்றும் மார்க்கண்டேய கட்ஜூ கூறியிருக்கிறார்.

அடுத்த செய்தி