ஆப்நகரம்

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் மேலாண் இயக்குநர்மீது வழக்குப்பதிவு

சிபிஐ-யை தொடர்ந்து, ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் மேலாண் இயக்குநர் சாந்தா கோச்சார்மீது அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது.

Samayam Tamil 2 Feb 2019, 1:35 pm
சிபிஐ-யை தொடர்ந்து, ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் மேலாண் இயக்குநர் சாந்தா கோச்சார்மீது அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது.
Samayam Tamil icici


2012ம் ஆண்டில் வீடியோகான் குழுமத்திற்கு, ஐசிஐசிஐ வங்கி 3 ஆயிரத்து 250 கோடி ரூபாய் கடன் வழங்கியது. விதிமுறைகளுக்கு மாறாக இந்த கடன் வழங்கப்பட்டதாகவும் அதற்கு கைமாறாக வீடியோகான் மேலாண் இயக்குநர் வேணுகோபால் தூத், சாந்தா கோச்சாரின் கணவர் நடத்தும் நியூபவர் நிறுவனத்தில் மறைமுகமாக 64 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கடன் வழங்கிய விவகாரத்தில் வங்கி நடத்தை விதிமுறைகளை மீறப்பட்டிருப்பதாக நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா குழு குற்றம்சாட்டியதை அடுத்து, ஐசிஐசிஐ வங்கியின் மேலாண் இயக்குநர் மற்றும் சிஇஓ பொறுப்பில் இருந்து சாந்தா கோச்சார் நீக்கப்பட்டார்.

மேலும் வீடியோகான் கடன்முறைகேடு வழக்கில், சாந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் குழும மேலாண் இயக்குநர் வேணுகோபால் தூத் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த விவகாரத்தில் பண மோசடி நடைபெற்றிருக்கிறதா என ஆய்வு மேற்கொண்ட அமலாக்கத்துறை, சாந்தா கோச்சார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. வீடியோகான் நிறுவனத்திற்கு ஐசிஐசிஐ வங்கி கடன் வழங்குவதற்கு இசைவு தெரிவித்ததற்காக, சாந்தா கோச்சார் தனிப்பட்ட முறையில் ஆதாயம் அடைந்தாரா என அமலாக்கத்துறை விசாரிக்க உள்ளது.

அடுத்த செய்தி