ஆப்நகரம்

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு

இரட்டை இலை சின்னதை பெற்று தர லஞ்சம் வாங்கியதாக தலைநகர் தில்லியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

TNN 17 Apr 2017, 9:44 am
புதுதில்லி: இரட்டை இலை சின்னதை பெற்று தர லஞ்சம் வாங்கியதாக தலைநகர் தில்லியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil case registered against ttv dhinakaran for allegedly offering bribe for two leaves symbol
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு


ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என அதிமுக பிளவு கண்டது. தொடர்ந்து, கட்சியையும், சின்னத்தையும் கைப்பற்ற இரு அணிகளும் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இதனிடையே நடைபெறுவதாக இருந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது, அதிமுக கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணியம் முடக்கியது.

இது தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வரும் நிலையில், இரட்டை இலை சின்னதை பெற்று தர லஞ்சம் வாங்கியதாக தலைநகர் தில்லியில் சுகேஷ் சந்திரா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து சுமார் ரூ.1.30 கோடியை தில்லி போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் ரூ.60 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தனியார் ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திராவிடம் தில்லி குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் போது, இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர, சசிகலா அணியிடம் இருந்து அதவாது, டிடிவி தினகரனிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது.

அதன் அடிப்படையில், இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர லஞ்சம் கொடுத்ததாக, டிடிவி தினகரன் மீது தில்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குபப்திவு செய்துள்ளனர்.
Case registered against TTV Dhinakaran for allegedly offering bribe for Two leaves symbol

அடுத்த செய்தி