ஆப்நகரம்

காவலரை கொல்ல முயன்ற இளைஞர்..!

மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது ஏற்பட்ட பிரச்சனையில் காவலரை குளத்தில் மூழ்கடித்து இளைஞர் ஒருவர் கொல்ல முயலும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

TNN 7 Sep 2016, 1:52 pm
மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது ஏற்பட்ட பிரச்சனையில் காவலரை குளத்தில் மூழ்கடித்து இளைஞர் ஒருவர் கொல்ல முயலும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil caught on camera youth tries to drown policeman in kalyan
காவலரை கொல்ல முயன்ற இளைஞர்..!


நேற்று மாலை மகராஷ்ட்ர மாநிலம் தானே அருகில் உள்ள கல்யாண் பகுதியில் விநாயகர் சிலைகளை கரைக்கச் செல்லும் ஊர்வலம் நடைபெற்றது.அப்பகுதியைச் சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர் டாகலே என்பவர் ஊர்வலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

தானேயின் பல பகுதிகளிலிருந்தும் விநாயகர் சிலைகள் வந்ததால் ஊர்வலத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது.எனவே வரிசையாக வந்து சிலைகளை கரைக்க வருமாறு டாகலே கூறியுள்ளார்.ஆனால் ஜாரி மாரி கணேஷ் உட்சவ் மண்டலின் உறுப்பினர்களான நான்கு இளைஞர்கள் வரிசையில் வர முடியாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் அவர்களுக்கும் டாகலேவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இறுதியில் வாக்குவாதம் கைகலப்பாக மாறி,நான்கு இளைஞர்களும் சேர்ந்து டாகலேவை தாக்கத் தொடங்கியுள்ளனர்..இதில் ஒரு இளைஞர் டாகலேவை அருகிலுள்ள குளத்தின் நீரில் மூழ்கடித்து கொல்லப்பார்த்துள்ளார்.ஆனால் அந்த இளைஞரை சமாளித்து உயிர் தப்பும் டாகலே,இறுதியில் நீந்தி கரையேறுகிறார்.இந்த காட்சிகள் அனைத்தையும் யாரோ ஒருவர் செல்போனில் படம் எடுத்துள்ளார்

இதனை தொடர்ந்து டாகலே மீது தாக்குதல் நடத்திய 4 இளைஞர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளது.தலைமுறைவாக இருக்கும் அவர்களை தேடும் பணியையும் மும்பை காவல்துறை முடுக்கிவிட்டுள்ளது.

அடுத்த செய்தி