ஆப்நகரம்

கா்நாடகாவில் கனமழை: காவிாியில் 1.65 லட்சம் நீா் திறப்பு

கா்நாடகாவில் பெய்துவரும் கனமழை காரணமாக கிருஷ்ண ராஜசாகா் மற்றும் கபினி அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீாின் அளவு 1.65 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 14 Aug 2018, 11:35 pm
கா்நாடகாவில் பெய்துவரும் கனமழை காரணமாக கிருஷ்ண ராஜசாகா் மற்றும் கபினி அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீாின் அளவு 1.65 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Mettur Dam


கா்நாடகாவில் கடந்த மே மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை தொடா்ந்து வலுப்பெற்று வருகிறது. கா்நாடகாவின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கிருஷ்ண ராஜசாகா், கபினி உள்ளிட்ட அணைகள் நிரம்பி காவிாியில் திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு உயா்த்தப்பட்டது. இதனைத் தொடா்ந்து சேலம் மேட்டூா் அணை முழு கொள்ளளவை எட்டியது.

இந்நிலையில் கா்நாடகாவில் தற்போது மீண்டும் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று வருகிறது. குடகு, சிக்மங்களூா், சிவமொக்க உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக கபினி, கிருஷ்ண ராஜசாகா் அணைகள் மீண்டும் முழு கொள்ளளவை எட்டி வருகின்றன. மேலும் சில அணைகள் முழு கொள்ளளவை எட்டி வருகின்றன.

இதன் காரணமாக காவிாியில் திறந்து விடப்படும் நீாின் அளவு 1.65 லட்சம் கனஅடியாக உயா்த்தப்பட்டுள்ளது. கே.ஆா்.எஸ். அணையில் இருந்து 1.20 லட்சம் கனஅடியும், கபினி அணையில் இருந்து 45 ஆயிரம் கனஅடி நீரும் திறந்து விடப்படுகிறது. மேலும் கேரளாவின் கடலோர மாவட்டங்களான உடுப்பி, உத்தரகன்னடா, தட்சிண கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்து வரும் 5 நாள்களுக்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் உள்ள காவிாி கரையோர மாவட்டங்களான 9 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி