ஆப்நகரம்

காவிரி விவகாரம்: மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய நாளை இறுதி நாள்

காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு தொடர்பாக தமிழகம், கர்நாடகா, கேரள மாநில அரசுகள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது விசாரணை நடத்துவது குறித்து நாளைக்குள் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

TNN 25 Oct 2016, 8:40 am
டெல்லி: காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு தொடர்பாக தமிழகம், கர்நாடகா, கேரள மாநில அரசுகள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது விசாரணை நடத்துவது குறித்து நாளைக்குள் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Samayam Tamil cauvery issue central govt should response to sc tomorrow
காவிரி விவகாரம்: மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய நாளை இறுதி நாள்


முன்னதாக மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மாதவி திவான், நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு ஆஜரானார். அப்போது, காவிரி விவகாரத்தில் மத்திய அரசு எழுத்துப்பூர்வமான தனது வாதத்தை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் நாளை வரை அவகாசம் அளித்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு தொடர்பாக தமிழகம், கர்நாடகா, கேரளா அரசுகள் மனு தாக்கல் செய்ய முற்பட்டனர். ஆனால் இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளின் அனுமதி பெற்று, பின்னர் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் தெரிவித்தது.

தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்படவிருந்த மனுவில், காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு அடுத்த ஆண்டு ஜனவரி வரை, கர்நாடகம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

Cauvery issue Central Govt should response to SC tomorrow.

அடுத்த செய்தி