ஆப்நகரம்

பி.என்.பி. மோசடி: துணை மேலாளர் உட்பட 3 பேர் கைது

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற மெகா மோசடி தொடர்பாக வங்கியின் முன்னாள் துணை மேலாளர் உட்பட 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

Samayam Tamil 17 Feb 2018, 2:12 pm
மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற மெகா மோசடி தொடர்பாக வங்கியின் முன்னாள் துணை மேலாளர் உட்பட 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
Samayam Tamil cbi arrests three people including former deputy manager over pnb banking fraud
பி.என்.பி. மோசடி: துணை மேலாளர் உட்பட 3 பேர் கைது


பஞ்சாப் நேஷனல் வங்கி இந்தியாவின் 2வது பெரிய அரசு வங்கி ஆகும். இவ்வங்கி பங்குச்சந்தைக்கு (பிஎஸ்இ) அனுப்பியுள்ள அறிக்கையில் ரூ.11,400 கோடி முறைகேடு நடந்ததாக கூறப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்அதிகாரிகள் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் பிரபல நகைக்கடை அதிபர் நிரவ் மோடி மீது புகார் கூறப்படுகிறது. இந்த முறைகேடு கடன் பொறுப்பேற்பு ஆவணங்கள் மூலம் நடைபெற்றுள்ளதாக தெரியவந்திருக்கிறது.

இதில் மேலும் இரு பொதுத்துறை வங்கிகள் (இந்தியன் யூனியன் வங்கி, அலகாபாத் வங்கி) மற்றும் ஒரு தனியார் வங்கி (ஆக்ஸிஸ் வங்கி) ஆகியவற்றுக்கும் தொடர்பிருக்கலாம் என்று தெரிகிறது. இந்த வங்கிகள் பஞ்சாப் நேஷனல் வங்கியால் வழங்கப்படும் கடன் சார்ந்த ஆவணங்களை பெறுகின்றன.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள சிபிஐ அதிகாரிகள் ஓய்வுபெற்ற துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி, மனோஜ் காரத், மனோஜ் ஹேமந்த் காரத் ஆகிய மூவரை சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.

இதுவரை இந்த வழக்கு தொடர்பான விசாரணை வளையத்தில் சிக்கிய பி.என்.பி. ஊழியர்கள் 18 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி