ஆப்நகரம்

ரூ. 2,654 கோடி மோசடி வழக்கில் ஓய்வு பெற்ற இரண்டு வங்கி அதிகாரிகள் கைது!

ரூ. 2,654 கோடி மோசடி வழக்கில், இன்று ஓய்வு பெற்ற இரண்டு பாங்க் ஆப் இந்தியா வங்கியின் அதிகாரிகள சிபிஐ​ போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 6 Jul 2018, 10:21 pm
ரூ. 2,654 கோடி மோசடி வழக்கில், இன்று ஓய்வு பெற்ற இரண்டு பாங்க் ஆப் இந்தியா வங்கியின் அதிகாரிகள சிபிஐ போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil arrest


குஜராத் மாநிலம் வதோதராவை தலைமையிடமாக கொண்டு டைமன்ட் பவர் இன்ஃப்ராஸ்டரக்சர் (Diamond Power Infrastructure Ltd – DPIL) என்ற பெயரில் கேபிள் வையர் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனம் கடந்த 2008ம் ஆண்டு முதல் விரிவாக்கம் என்ற பெயரில் 11 அரசு மற்றும் தனியார் வங்கிகளிடம் கடன் பெற்றது.

2016ம் ஆண்டு ஜூன் 29 தேதி கணக்கின் படி, மொத்தம் 2,654.40 கோடி ரூபாய் மதிப்பிலான கடனை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் டைமன்ட் நிறுவனத்தைச் சேர்ந்த சுரேஷ் நரையன் பாத்நகர் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். மேலும், மோசடி வழக்கில் சுரேஷின் மகன்கள் அமித், சமித் ஆகியோரையும் போலீசார் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், இன்று டைமன்ட் கம்பெனியின் கடன் மோசடிக்கு தொடர்புடையதாக பாங்க் ஆப் இந்தியாவின் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகள் அக்னிகோத்ரி, ஸ்ரீவாஸ்தவா ஆகியோரை சிபிஐ போலீசார் கைது செய்தனர். இவர்கள் நாளை காலை அகமதாபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி