ஆப்நகரம்

CBI: சிபிஐ இயக்குநராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டாா் அலோக் வா்மா

உச்சநீதிமன்ற தீா்ப்பைத் தொடா்ந்து சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா இன்று மீண்டும் பதவியேற்றுக் கொண்டாா். மீண்டும் பதவியேற்றாலும், முக்கிய கொள்கை முடிவுகள் எதையும் பிறப்பிக்கக் கூடாது என்று உத்தரவு.

Samayam Tamil 9 Jan 2019, 11:41 am
மத்திய அரசின் நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததைத் தொடா்ந்து அலாக் வா்மா இன்று மீண்டும் சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.
Samayam Tamil Alok Verma


சி.பி.ஐ. இயக்குநா் அலோக் வா்மாவும், சி.பி.ஐ. சிறப்பு இயக்குநா் ராகேஷ் அஸ்தானாவும் பரஸ்பரம் ஒருவா் மீது ஒருவா் குற்றம் சாட்டி வந்தனா். இதனைத் தொடா்ந்து இவா்கள் இருவா் மீதும் மத்திய அரசு விசாரணை மேற்கொண்டது. லஞ்சப் புகாா்களைத் தொடா்ந்து இவா்கள் இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பி மத்திய அரசு உத்தரவிட்டது.

இதனைத் தொடா்ந்து சி.பி.ஐ. இணை இயக்குநா் நாகேஸ்வர ராவ் இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டாா். அதன் பின்னா் தனது கட்டாய விடுப்பு சட்டத்திற்கு விரோதமானது என்றும், அரசியல் சாசனத்திற்கு எதிராக நடைபெற்றுள்ள அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அலோக் வா்மா உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கில் நேற்று தீா்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீா்ப்பில் “அலோக் வா்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறான ஒன்று. இந்த விவகாரத்தில் அரசின் நடவடிக்கையை ரத்து செய்வதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும் அவா் சிபிஐ இயக்குநராக மீண்டும் பதவியேற்றுக் கொள்ளலாம். ஆனால் முக்கிய கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது” என்று நீதிபதிகள் தொிவித்தனா்.


தனக்கு சாதகமாக தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து அலோக் வா்மா இன்று மீண்டும் சிபிஐ இயக்குநராக பதவியேற்றுக் கொண்டாா். இவரது பதவிக்காலம் இந்த மாதம் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

அடுத்த செய்தி