ஆப்நகரம்

நாடு முழுவதும் திடீர் சோதனையில் சிபிஐ- 150 இடங்களில் அதிரடி நடவடிக்கை!

சிபிஐ அதிகாரிகள் திடீரென 150க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டதால், மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 30 Aug 2019, 8:11 pm
அரசின் துறைகள் லஞ்சம், ஊழல் போன்றவற்றால் மோசமாக செயல்பட்டு வருவதாக சாதாரண குடிமக்கள் முதல் சிறு முதலாளிகள் வரை குற்றம்சாட்டி வருகின்றனர். இதுபற்றி ஏராளமான புகார்கள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப் பட்டுள்ளன. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுத்த பாடில்லை.
Samayam Tamil CBI Raid


இந்த சூழலில் ஊழலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க சிறப்பு குழு ஒன்றை சிபிஐ அமைத்தது. அவர்களைக் கொண்டு, இன்று திடீரென 150க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் இறங்கினர்.

சிதம்பரத்துக்கு சிபிஐ காவல் மேலும் நீட்டிப்பு!

இதில் ரயில்வே, நிலக்கரி, சுங்க வரித்துறை, இந்திய உணவுக் கழகம், ஆற்றல், நகராட்சி துறை, இ.எஸ்.ஐ.சி, போக்குவரத்து, சி.பி.டபிள்யூ.டி, தீயணைப்பு, எஸ்டேட் இயக்குநரகம், சார் பதிவாளர் அலுவலகம், ஜி.எஸ்.டி அலுவலகம், பொதுத் துறை வங்கிகள், விவசாயத் துறை, கப்பல் போக்குவரத்து, பி.எஸ்.என்.எல், இரும்பு, என்.ஹெச்.ஏ.ஐ உள்ளிட்ட துறைகள் அடங்கும்.

நான் யாரையும் பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: டிகே சிவகுமார்!!

இந்த சோதனை டெல்லி, ஜெய்ப்பூர், ஜோத்பூர், கவுகாத்தி, ஸ்ரீநகர், ஷில்லாங், சண்டிகர், சிம்லா, சென்னை, மதுரை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, புனே, காந்தி நகர், கோவா, போபால், ஜபல்பூர், நாக்பூர், பாட்னா, ராஞ்சி, காஸியாபாத், டேராடூன், லக்னோ ஆகிய இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

பீகார் தலைமை செயலகத்தில் இந்த ஆடைகள் அணியத் தடை!!

அடுத்த செய்தி