ஆப்நகரம்

ஒழுங்கா சிபிஐக்கு ஒத்துழைப்பு கொடுங்க; ப.சிதம்பரம் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

அமலாக்கத்துறை முன்பு தானாக சரணடைய முன்வந்து சிதம்பரம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Samayam Tamil 13 Sep 2019, 3:22 pm
மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தார். கடந்த 2007ஆம் ஆண்டில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தில் ரூ.305 கோடி அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
Samayam Tamil P Chidambaram


இதில் முறைகேடு நடந்ததாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனம் மீது புகார் கூறப்பட்டது. இதுகுறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பலமுறை ஜாமீன் பெற்று, விசாரணையில் இருந்து தப்பித்து வந்தார்.

குழப்பத்தில் மத்திய அமைச்சர்கள்... கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்...!!

ஆனால் வழக்கு நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு ப.சிதம்பரம் உரிய ஒத்துழைப்பு தரவில்லை என்று சிபிஐ முறையிட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி, ப.சிதம்பரம் வீட்டில் நுழைந்து, அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்திவிட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் தர மறுத்த நீதிமன்றம், சிபிஐ காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து ப.சிதம்பரம் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை.

சரக்கு தாறுமாறு: மகிழ்ச்சியில் தவழும் கேரள அரசு

இந்நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு விசாரணையில் வரும் 19ஆம் தேதி வரை, சிறையில் அடைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ப.சிதம்பரம் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அவர்கள் ஜாமீனுக்கு கீழ் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டனர். இதனால் தனது ஜாமீன் மனுவை வாபஸ் பெற சூழல் ஏற்பட்டது.

நீதிபதி தஹில் ரமணி பணியிடமாற்றம்: உச்ச நீதிமன்ற கொலிஜியம் பதில்!!

சிபிஐ காவலில் இருக்கும் ப.சிதம்பரம், தான் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் சரணடைய விருப்பம் தெரிவித்தார். இதுதொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை வழக்கில் சரணடைய விருப்பம் தெரிவித்த ப.சிதம்பரத்தின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் வரும் 19ஆம் தேதி வரை, திகார் சிறையில் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி