ஆப்நகரம்

முன்னாள் அமைச்சா் ஜெயந்தி நடராஜன் மீது சிபிஐ வழக்குப்பதிவு

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. அரசுப் பணியை பயன்படுத்தி குற்றச் செயலில் ஈடுபட்டது உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

TOI Contributor 9 Sep 2017, 10:50 pm
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. அரசுப் பணியை பயன்படுத்தி குற்றச் செயலில் ஈடுபட்டது உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Samayam Tamil cbi filed fir from ex minister jayanthi natarajan
முன்னாள் அமைச்சா் ஜெயந்தி நடராஜன் மீது சிபிஐ வழக்குப்பதிவு


காங்கிரஸ் கட்சியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தவர் ஜெயந்தி நடராஜன். 2012 ஆம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலம் சிங்பும் மாவட்டத்திலுள்ள 192 ஹெக்டேர் வனத்திற்கு சொந்தமான 55 ஹெக்டேர் நிலத்தை முறைகேடாக தனியார் தாது உற்பத்தி கம்பெனிக்கு ஒதுக்கியதாக புகார் எழுந்தது.

இதில் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை கமிட்டியின் பரிந்துரைகள் புறந்தள்ளப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் விதிகளை மீறி தனியார் நிறுவனத்துக்கு 55 ஹெக்டேர் வன நிலத்தை முறைகேடாக ஒதுக்கியது குறித்து சிபிஐ விசாரணை நடத்தியது.

இதில் குற்றச் செயலில் ஈடுபட்டதாகவும், தனது பதவி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் ஜெயந்தி நடராஜன் மீது சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

இதனடிப்படையில் நேற்று முன் தினம் ஜெயந்தி நடராஜன் மற்றும் எலக்டோ ஸ்டீல் கார்பரேஷன் என்ற தனியார் நிறுவன பொது மேலாளர் உமாங் கேஜ்ரிவால் மற்றும் சிலர் மீது கூட்டுச்சதி லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவு 13(1), 13(2) pca act ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து இன்று மதியம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 10 க்கும் மேற்பட்டோர் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜெயந்தி நடராஜன் இல்லத்துக்கு வந்துள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து அங்கு ஊடகவியலாளர்களும், கட்சித் தொண்டர்களும் குவிந்துள்ளனர்.

சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்கு வந்துள்ளது குறித்து ஜெயந்தி நடராஜன் தரப்பில் மறுப்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

அடுத்த செய்தி