ஆப்நகரம்

உங்கள சும்மா விட மாட்டோம்; ஆருஷி வழக்கில் மேல்முறையீடு செய்யும் சிபிஐ!

ஆருஷி கொலை வழக்கில், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, சிபிஐ மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

TNN 13 Oct 2017, 12:23 am
அலகாபாத்: ஆருஷி கொலை வழக்கில், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, சிபிஐ மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
Samayam Tamil cbi likely to appeal against acquittal of talwars
உங்கள சும்மா விட மாட்டோம்; ஆருஷி வழக்கில் மேல்முறையீடு செய்யும் சிபிஐ!


கடந்த 2008ஆம் ஆண்டு, உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஆருஷி தல்வார் என்ற 14 வயது சிறுமி, தனது வீட்டில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இதையடுத்து அவரது வீட்டு வேலையாள் ஹேமராஜூம் கொல்லப்பட்டார்.

நாட்டையே உலக்கிய இந்த வழக்கில், 2013ஆம் ஆண்டு ஆருஷியின் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது.

அதில், போதிய ஆதாரங்கள் இல்லாததால், ஆருஷியின் பெற்றோர் விடுவிக்கப்பட்டனர். இது சிபிஐ தரப்பிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்கள் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் நகல் கிடைத்தவுடன், இதுதொடர்பாக பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CBI likely to appeal against acquittal of Talwars.

அடுத்த செய்தி