ஆப்நகரம்

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் சென்னை வீட்டில் சிபிஐ விசாரணை!

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீட்டிற்கு சிபிஐ விசாரணைக்காக வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

TNN 12 Dec 2017, 7:31 pm
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீட்டிற்கு சிபிஐ விசாரணைக்காக வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil cbi officials visit jayanthi natarajan residence in chennai
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் சென்னை வீட்டில் சிபிஐ விசாரணை!


காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, மத்திய அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன் முறைகேடாக வனத்துறைக்கு சொந்தமான இடங்களை சுரங்க நிறுவனத்திற்கு அளித்ததாக புகார் எழுந்தது.

இந்தப் புகாரை விசாரித்து வரும் சிபிஐயின் ஊழல் தடுப்பு பிரிவினர், இன்று விசாரணைக்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். ஆனால், அவர்களை உள்ளே விடாமல் வீட்டின் கதவை உள்புறமாக பூட்டியதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி சென்றனர். விசாரணைப் பற்றிய் தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர்கள் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி