ஆப்நகரம்

பாஜக ஆட்டம் ஆரம்பம்; இனி எங்கயும் தப்பிக்க முடியாது - முன்னாள் கமிஷனருக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாருக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Samayam Tamil 26 May 2019, 1:03 pm
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சாரதா சிட்பண்ட் நிறுவனம் அதிக வட்டி தருவதாக மக்களிடம் விளம்பரப் படுத்தியுள்ளது. இதன்மூலம் ரூ.2,500 கோடி வசூலித்து, அதை திரும்பத் தரவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Samayam Tamil Rajiv Kumar


இந்தப் பணத்தை சிட்பண்ட் நிர்வாகிகள் முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளனர். முதலீட்டாளர்களுக்கு பணத்தை தராமல், கடந்த 2013ல் சாரதா சிட்பண்ட் நிறுவனம் மூடப்பட்டது.

இந்த மோசடியில் கொல்கத்தா போலீஸ் கமிஷனராக இருந்த ராஜீவ் குமாருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. அவரை சிபிஐ விசாரிக்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கினார்.

ஆனால் உச்சநீதிமன்றம் வரை சென்று அனுமதி பெற்று, ராஜீவ் குமாரை, ஷில்லாங்கில் சிபிஐ விசாரித்தது. இதையடுத்து சிஐடி பிரிவிற்கு கூடுதல் டிஜிபியாக திடீரென மாற்றம் செய்யப்பட்டார்.

பின்னர் முன் ஜாமீன் வழங்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் ராஜீவ் குமார் மனு தாக்கல் செய்தார். ஆனால் அதனை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இந்நிலையில் ராஜீவ் குமார் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க, சிபிஐ அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பெற்றுள்ளது.

இது அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே அவர் இனி வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முடியாது.

அடுத்த செய்தி