ஆப்நகரம்

காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் வீட்டில் திடீர் ரெய்டு - என்ன காரணம்?

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று காலை அதிரடியாக ரெய்டு நடந்துள்ளது.

Samayam Tamil 5 Oct 2020, 10:12 am
காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவருமான டிகே சிவக்குமார் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை ரெய்டில் ஈடுபட்டனர். அவருக்கு சொந்தமான பெங்களூரு, மும்பை உள்ளிட்ட 14 இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது. மேலும் இவரது சகோதரரும், காங்கிரஸ் கட்சி எம்.பியுமான டிகே சுரேஷின் வீட்டிலும் ரெய்டு நடந்து கொண்டிருக்கிறது. இதில் பெங்களூருவில் உள்ள தொட்டலஹள்ளி, கனகபுரா மற்றும் சதாசிவ நகர் இல்லங்களும் அடங்கும்.
Samayam Tamil DK Shivakumar


காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு டிகே சிவக்குமார் 6 முறை எம்.எல்.ஏ பதவி வகித்துள்ளார். இக்கட்டான சூழல்களில் காங்கிரஸ் தலைமைக்கு பலமுறை உதவி செய்துள்ளார். இதனால் கட்சி மேலிடத்தில் டிகே சிவக்குமாருக்கு மிகுந்த நற்பெயர் உண்டு.

இவரது சொத்து மதிப்பு 251 கோடி ரூபாய் என்று 2013ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த 2017ஆம் ஆண்டு டிகே சிவக்குமார் வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் வருவான வரித்துறை விசாரித்து வருகிறது.

பதறவைக்கும் ஹத்ராஸ் சம்பவம்: லேட்டஸ்ட் நிலவரம் என்ன?

இந்த பண மோசடி குறித்து அமலாக்கத்துறை இயக்குநரகம் அளித்த தகவல்களின் பேரில் டிகே சிவக்குமார் மீது சிபிஐ அதிகாரிகள் ஊழல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்பேரில் இன்றைய ரெய்டு நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

நாட்டின் செல்வாக்கு மிகுந்த அரசியல் கட்சி தலைவர்களில் ஒருவராக டிகே சிவக்குமார் திகழ்கிறார். இந்த சூழலில் இன்று காலை நடைபெற்று வரும் ரெய்டால் கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி