ஆப்நகரம்

கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 7 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு

முறைகேடான பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதற்காக, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி உள்ளிட்ட 7 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

TOI Contributor 17 May 2017, 10:15 am
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி உள்ளிட்ட 7 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
Samayam Tamil cbi registered a case against karti p chidambaram
கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 7 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு


இந்திராணி மற்றும் பீட்டர் முகர்ஜி ஆகியோருக்குச் சொந்தமான ஐஎன்எஸ் மீடியா நிறுவனம், முறைகேடான வகையில் 305 கோடி ரூபாய் அந்நிய முதலீடு பெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த முறைகேட்டை கண்டுபிடித்த மத்திய வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு கடந்த 2008ம் ஆண்டில் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திற்கு, தகவல் தெரிவித்தது. இதன்பேரில், விளக்கம் அளிக்கும்படி ஐஎன்எக்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதையடுத்து, ஐஎன்எக்ஸ் நிறுவனம், சட்ட பிரச்னைகளில் இருந்து தப்பிப்பதற்காக, அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி, நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவிகள் செய்துள்ளார்.

கார்த்தியின் உதவிகளுக்காக, ஐஎன்எக்ஸ் நிறுவனம், முறைப்படி ரசீது போட்டு, சேவைக் கட்டணம் வழங்கியுள்ளது. இந்த ரசீதில், கார்த்தி சிதம்பரத்தின் கூட்டாளிகள் நடத்திவரும் அட்வான்டேஜ் ஸ்ட்ரேட்டஜிக் கன்சல்டிங் நிறுவனத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கார்த்தியின் பினாமி நிறுவனமாகும்.

இது, விசாரணையில் உறுதியானதை தொடர்ந்து, சிபிஐ நேற்று கார்த்தி, அவரது தந்தை சிதம்பரத்தின் வீடுகள் மற்றும் கூட்டாளிகளின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தியது.

இதன் முடிவாகக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், கார்த்தி சிதம்பரம் மீது இந்திய தண்டனைச் சட்டம் 120 பி, 420 பிரிவுகள்- ஊழல் தடுப்புச் சட்டம் 13 (2), 13 (1) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி சிபிஐ பொருளாதார குற்றங்கள் தடுப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர் ஆர்.பார்த்தசாரதி இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார்.

கார்த்தி மட்டுமின்றி, அவரது கூட்டாளிகள் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி உள்ளிட்ட 6 பேர் மீதும் சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

அதேசமயம், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக, இந்த சிபிஐ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தியும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

The Central Bureau of Investigation, on Monday, registered a case against Karti P Chidambaram and six others.

அடுத்த செய்தி