ஆப்நகரம்

மகனை விடுங்க, என்கிட்ட வாங்க: ப.சிதம்பரம்

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் எனது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு தொல்லை கொடுக்காமல் தன்னை விசாரிக்குமாறு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

TNN 15 Sep 2017, 1:28 pm
டெல்லி: ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் எனது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு தொல்லை கொடுக்காமல் தன்னை விசாரிக்குமாறு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
Samayam Tamil cbi should question me not harass my son p chidambaram
மகனை விடுங்க, என்கிட்ட வாங்க: ப.சிதம்பரம்


ஏட்டெல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு லுக்அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்நிலையில், “ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில் சிபிஐ தவறான தகவல்களை பரப்புகிறது. அந்நிய நேரடி முதலீட்டு வாரியத்தின் பரிந்துரையையின் படி, நான்தான் ஒப்பந்தத்திற்கு அனுமதி அளித்தேன். இந்த வழக்கில் என் மகன் கார்த்தி சிதம்பரத்தை விசாரிப்பது ஏன்?” என்று ப.சிதம்பரம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி