ஆப்நகரம்

ரூ.390 கோடியை பறிகொடுத்த ஓரியண்டல் வங்கி!

பஞ்சாப் நேஷனல் வங்கியைத் தொடர்ந்து ஓரியண்டல் வங்கியில் ரூ.390 கோடி மோசடி குறித்து சிபிஐ விசாரணையைத் தொடங்கியுள்ளது.

Samayam Tamil 24 Feb 2018, 2:41 pm
டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியைத் தொடர்ந்து ஓரியண்டல் வங்கியில் ரூ.390 கோடி மோசடி குறித்து சிபிஐ விசாரணையைத் தொடங்கியுள்ளது.
Samayam Tamil cbi sits on oriental bank of commerce complaint for six months acts after nirav modi scam
ரூ.390 கோடியை பறிகொடுத்த ஓரியண்டல் வங்கி!


பஞ்சாப் நேஷனல் வங்கி இந்தியாவின் 2வது பெரிய அரசு வங்கி ஆகும். இவ்வங்கி பங்குச்சந்தைக்கு (பிஎஸ்இ) அனுப்பியுள்ள அறிக்கையில் ரூ.11,400 கோடி முறைகேடு நடந்திருப்பது பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. இதில் தொடர்புடைய தொழிலதிபர் நிரவ் மோடிக்குச் சொந்தமான 5100 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, கடந்த ஜனவரி 1, 2015 முதல் மார்ச் 1, 2017 வரையான கால கட்டத்தில் 5200 பொதுத்துறை வங்கி ஊழியர்கள் மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கு ஒரு வங்கி ஊழியர் மீது மோசடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டது.

இச்சூழலில் பஞ்சாப் நேஷனல் வங்கியைத் தொடர்ந்து ஓரியண்டல் வங்கியிலும் ரூ.390 கோடிக்கு மோசடி நடத்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டெல்லியை சேர்ந்த துவாரகா தாஸ் சேத் இன்டர்நேஷனல் (Dwarka Das Seth International) என்ற வைர வியாபார நிறுவனம் ஓரியண்டல் வங்கியில் பெற்ற கடன் ஒப்புகைக் கடிதம் (Letter for Credit) மூலம், மற்ற வங்கிகளில் சுமார் ரூ.390 கோடி கடன் பெற்றுள்ளது.

பெற்ற கடனைத் திரும்பச் செலுத்தாத நிலையில் வங்கியிலிருந்து 6 மாதங்களுக்கு முன் சிபிஐயில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகார் அடிப்படையில் துவாரகா சேத் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குநர்களான சபியா சேத், ரீட்டா சேத், கிருஷ்ண குமார் சிங், ரவி சிங் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த மோசடிப் பேர்வழிகள் தற்போது வெளிநாட்டுக்குச் சென்று தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி