ஆப்நகரம்

10, 12ம் வகுப்பு மாணவர்கள் தங்களது ஊரிலேயே தேர்வு எழுதலாம் - அரசு அதிரடி

10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் தற்போது இருக்கும் ஊரிலேயே தேர்வை எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 27 May 2020, 5:57 pm
10,12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்நிலையில் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தொடர்பாக மத்திய மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்வீட் செய்துள்ளார்.
Samayam Tamil 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் பொதுத்தேர்வு


அந்த பதிவில், 10 , 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள், தற்போது இருக்கும் ஊரிலேயே பொதுத்தேர்வை எழுதிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் முன்பு தேர்வு எழுதிய மையங்களுக்கு செல்ல தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது .


நாடு முழுவதும் தற்போது நான்காம் கட்ட பொதுமுடக்கம் அமலில் உள்ளது. ஜூன் 1ம் தேதிக்கு பிறகு பொதுமுடக்கம் நீட்டிக்கபடுமா? தளர்வுகளில் மாற்றங்கள் வருமா? என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. இந்நிலையில், வெவ்வேறு மாநிலங்களில் உள்ள மாணவர்கள், தொலைவில் சென்று தேர்வுகளை எழுதும் சிரமத்தை போக்க மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி