ஆப்நகரம்

எல்லையில் பாக்., ராணுவம் அத்துமீறல்: 11 வீரர்கள் படுகாயம்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், 11 வீரர்கள் படுகாயமடைந்தனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.

TNN 26 Oct 2016, 8:14 am
ஜம்மு: எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், 11 வீரர்கள் படுகாயமடைந்தனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.
Samayam Tamil ceasefire violations by pakistan in rs pura sector of jk
எல்லையில் பாக்., ராணுவம் அத்துமீறல்: 11 வீரர்கள் படுகாயம்


ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று காலை 10 மணியளவில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர். சிறிய ரக குண்டுகளை வீசி நடத்திய தாக்குதலுக்கு, இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர். கடந்த 20 மணி நேரமாக நடைபெற்ற சண்டையில் பொதுமக்கள் 11 வீரர்கள் படுகாயமடைந்தனர். ஏராளமான வீடுகள் கடுமையாக சேதமடைந்தன. பாகிஸ்தான் தரப்பில் 3 வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் 18ஆம் தேதி, உரி பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர். இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் 40க்கும் முறைக்கும் மேல், எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் எல்லையில் உள்ள பள்ளிகளுக்கும் அடையாளம் தெரியாத நபர்கள் தீவைத்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்து, எல்லையில் உள்ள பள்ளிகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Ceasefire violations by Pakistan in RS Pura sector of J&K on for the last 20 hours,11 civilians injured, several houses damaged.

அடுத்த செய்தி