டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வங்கி மோசடிகளைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதில் வங்கி மோசடி தடுப்பு, பட்டயக் கணக்காளர்களை ஒழுங்குப்படுத்துவது உள்ளிட்ட பல விஷயங்கள் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
வங்கி நிதி மோசடியை தடுக்க புதிய ஆணையம் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்டுகிறது. பண மோசடி செய்த ஆசாமிகள் வெளிநாடு தப்பிச்செல்லாமல் தடுப்பது, தப்பிச்செல்லும் பட்சத்தில் அவர்களுடைய சொத்துக்களை பறிமுதல் செய்வது ஆகியவற்றுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பேசப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
அண்மையில் பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் வங்கி ஆகியவற்றில் மெகா மோசடிகள் நடத்திருப்பது அம்பலமானது நினைவுகூரத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதில் வங்கி மோசடி தடுப்பு, பட்டயக் கணக்காளர்களை ஒழுங்குப்படுத்துவது உள்ளிட்ட பல விஷயங்கள் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
வங்கி நிதி மோசடியை தடுக்க புதிய ஆணையம் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்டுகிறது. பண மோசடி செய்த ஆசாமிகள் வெளிநாடு தப்பிச்செல்லாமல் தடுப்பது, தப்பிச்செல்லும் பட்சத்தில் அவர்களுடைய சொத்துக்களை பறிமுதல் செய்வது ஆகியவற்றுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பேசப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
அண்மையில் பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் வங்கி ஆகியவற்றில் மெகா மோசடிகள் நடத்திருப்பது அம்பலமானது நினைவுகூரத்தக்கது.