ஆப்நகரம்

விவசாயிகள் தற்கொலைக்கு இழப்பீடு தீர்வல்ல: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை

மத்திய அரசு விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 3 Mar 2017, 12:43 pm
டெல்லி: மத்திய அரசு விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil center should find solution to stop formers suicide immediately supreme court
விவசாயிகள் தற்கொலைக்கு இழப்பீடு தீர்வல்ல: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை


விவசாயிகள் தற்கொலைக்கு வழங்கப்படும் இழப்பீட்டை முறைப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. தனியார் நிறுவனம் ஒன்று சமர்ப்பித்த இந்த மனுவின் மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதற்கு இழப்பீட்டுத்தொகை வழங்குவது மட்டும் தீர்வாகாது என்று கூறியுள்ளது.

மேலும், மத்திய அரசு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும் என்றும் அதன்படி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் அளித்த நீதிமன்றம் வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

அடுத்த செய்தி