இந்தியாவில் நேரம் சரியில்லை! கடிகாரத்தில் கை வைக்கும் மத்திய அரசு!
சூரியன் உதயத்தை வைத்து இந்திய நேரத்தை புதிதாக மாற்றியமைக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
TNN 24 Jul 2017, 1:46 am
சூரியன் உதயத்தை வைத்து இந்திய நேரத்தை புதிதாக மாற்றியமைக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
ஐஎஸ்டி எனப்படும் இந்திய நேரம் லண்டனில் உள்ள க்ரீன்விச் நேரத்தை விட ஐந்தரை மணிநேரத்தைக் கழித்து கணக்கிடப்படுகிறது. இதன்படி, இந்தியா முழுவதும் ஒரே நேரமே பின்பற்றப்படுகிறது.
இதனை சூரிய உதயத்தைப் பொறுத்து மாற்ற மத்திய அரசு ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெவ்வேறு நேர பிரதேசங்களை உருவாக்கி அவ்விடங்களில் சூரிய உதயத்தை அடிப்படையாகக் கொண்டு நேரத்தைக் கணக்கிடுவது பற்றி ஆலோசிப்பதாக தெரியவந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் புதன்கிழமை பேசிய பிஜூ ஜனதா தள எம்.பி மக்தாப் இது தொடர்பாக விவாதத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார். அருணாச்சலப் பிரதேசத்தின் பாஜக முதல்வர் பெமா கண்டுவும் சமீபத்தில் இது பற்றி வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய இந்திய நேரப்படி அருணாச்சலப் பிரதேசத்தில் 4 மணிக்கே சூரியன் உதித்துவிடுகிறது. ஆனால், அம்மாநிலத்தின் அலுவலக நேரம் 10 மணி தான். எனவே, இந்திய நேரத்தை மாற்றினால் உற்பத்தி நேரத்தை அதிகரிக்கலாம் என்றும் உத்தேசிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், 270 கோடி வாட் மின்சாரம் சேமிக்கப்படும் என்றும் அதனால் 94 ஆயிரம் கோடி ரூபாய் வரை அரசுக்கு செலவு குறையும் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்கா முதலிய பல நாடுகள் தனியான நேரத்தை பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது.
ஐஎஸ்டி எனப்படும் இந்திய நேரம் லண்டனில் உள்ள க்ரீன்விச் நேரத்தை விட ஐந்தரை மணிநேரத்தைக் கழித்து கணக்கிடப்படுகிறது. இதன்படி, இந்தியா முழுவதும் ஒரே நேரமே பின்பற்றப்படுகிறது.
இதனை சூரிய உதயத்தைப் பொறுத்து மாற்ற மத்திய அரசு ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெவ்வேறு நேர பிரதேசங்களை உருவாக்கி அவ்விடங்களில் சூரிய உதயத்தை அடிப்படையாகக் கொண்டு நேரத்தைக் கணக்கிடுவது பற்றி ஆலோசிப்பதாக தெரியவந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் புதன்கிழமை பேசிய பிஜூ ஜனதா தள எம்.பி மக்தாப் இது தொடர்பாக விவாதத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார். அருணாச்சலப் பிரதேசத்தின் பாஜக முதல்வர் பெமா கண்டுவும் சமீபத்தில் இது பற்றி வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய இந்திய நேரப்படி அருணாச்சலப் பிரதேசத்தில் 4 மணிக்கே சூரியன் உதித்துவிடுகிறது. ஆனால், அம்மாநிலத்தின் அலுவலக நேரம் 10 மணி தான். எனவே, இந்திய நேரத்தை மாற்றினால் உற்பத்தி நேரத்தை அதிகரிக்கலாம் என்றும் உத்தேசிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், 270 கோடி வாட் மின்சாரம் சேமிக்கப்படும் என்றும் அதனால் 94 ஆயிரம் கோடி ரூபாய் வரை அரசுக்கு செலவு குறையும் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்கா முதலிய பல நாடுகள் தனியான நேரத்தை பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது.