ஆப்நகரம்

அமெரிக்காவில் தாக்கப்பட்டது குறித்து அடுத்த வாரம் அறிக்கை

அமெரிக்காவில் இந்தியர்கள் தாக்கப்பட்டது குறித்து அடுத்த வாரம் மத்திய அரசு தரப்பில் அறிக்கை வெளியிடப்படும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் கூறியுள்ளார்.

TNN 9 Mar 2017, 12:07 pm
அமெரிக்காவில் இந்தியர்கள் தாக்கப்பட்டது குறித்து அடுத்த வாரம் மத்திய அரசு தரப்பில் அறிக்கை வெளியிடப்படும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் கூறியுள்ளார்.
Samayam Tamil center to present report on hate crime against in usa
அமெரிக்காவில் தாக்கப்பட்டது குறித்து அடுத்த வாரம் அறிக்கை


அமெரிக்காவில் இந்தியர்கள் மீது தொடர்ந்து நிறவெறித் தாக்குதல் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரத்தில் மட்டும் மூன்று இந்தியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, விரைந்து நடவடிக்கை எடுக்க அந்நாட்டு அரசுக்கு இந்தியத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க அரசும் இந்தியர்கள் மீதான விரோதப்போக்கிற்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், உரிய நடவடிக்கை எடுக்க முழு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.

இந்நிலையில், இன்று கூடிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதிக்கூட்டத்தில், மக்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்காவில் இந்தியர்கள் மீது நடைபெறும் தாக்குதல்கள் பற்றி அடுத்த வாரம் மத்திய அரசு அறிக்கை வெளியிடும் என்று உறுதி கூறியிருக்கிறார்.

அடுத்த செய்தி