ஆப்நகரம்

ரூ. 700 கோடி ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதியுதவியை மத்திய அரசு ஏற்காது- திடுக் தகவல்

கேரளாவுக்கு மழை வெள்ள நிவாரண நிதிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் ரூ. 700 கோடி மற்றும் கதார் அரசின் ரூ. 36 கோடி நிதியுதவிகளை மத்திய அரசு ஏற்காது என தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 22 Aug 2018, 10:30 am
கேரளாவுக்கு மழை வெள்ள நிவாரண நிதிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் ரூ. 700 கோடி மற்றும் கதார் அரசின் ரூ. 36 கோடி நிதியுதவிகளை மத்திய அரசு ஏற்காது என தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil kerala_floods
ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதியுதவிக்கு அனுமதி இல்லை..??


தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததை அடுத்து, கடந்த சில வாரங்களாக கேரளாவில் பெருமழை பெய்து வந்தது. இதனால் மொத்த மாநிலமுமே வெள்ளக்காடாக மாறியது.

தற்போது மழையின் தீவிரம் குறைந்திருந்தாலும், மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் இன்னும் வடியவில்லை. குறிப்பாக புறநகர் பகுதிகள் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளன.

கேரளாவை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர ரூ. 2500 கோடி தேவைப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். இதில் முதற்கட்டமாக மத்திய அரசு ரூ. 600 கோடி நிதி வழங்கியுள்ளது.

இதுதவிர உலகளவிலிருந்து பல்வேறு மக்கள், இந்தியாவில் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் மக்கள் ஆகியோர் கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம், கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ. 700 கோடியஒ அறிவித்தது. உலகளவில் இந்த பேரிடருக்கு அதிக நிதியுதவி அளிக்க முன்வந்துள்ள நாடு ஐக்கிய அரபு அமீரகம் தான்.

ஆனால் தற்போது இந்த நிதியுதவியை மத்திய அரசு ஏற்காது என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல மற்ற வெளிநாடுகள் கொடுக்கும் பணத்தையும் மத்திய அரசு அனுமதிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

கடந்த 2004ம் ஆண்டு சுனாமியால் தமிழகம் பாதிக்கப்பட்ட போது, வெளிநாடுகளில் வழங்கும் நிதியால் உறவில் குழப்பம் ஏற்படலாம். அதனால் குறிப்பிட்ட வெளிநாட்டு நிதியுதவிகளை ஏற்க கூடாது என்கிற சட்டம் கொண்டு வரப்பட்டது.

இதை முன்வைத்து மத்திய அரசு கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கும் ரூ. 700 கோடி நிதியை மத்திய அரசு அனுமதிக்காது என அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

முன்னதால குஜராத், மும்பை வெள்ளம், சென்னை பெருவெள்ளம், உத்தரகான்ட் வெள்ளம் ஆகிய இயற்கை பேரிடரின் போதும் வெளிநாட்டு நிதியை மத்திய அரசு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி