ஆப்நகரம்

இல்லாத ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 1,200 பேருக்கு மத்திய அரசு காசு கொடுக்குது..?

நாடு முழுவதும் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் கீழ் மோசடி செய்ததாக பல்வேறு மருத்துவமனைகள் மீது புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக 376 மருத்துவமனைகளிடம் விசாரணை நடந்து வருகிறது. அதே வேலையில்...

Samayam Tamil 18 Sep 2019, 10:17 am
நாட்டில் பொருளாதார ரீதியாக பின் தங்கி உள்ள குடும்பங்கள் எளிதாக மருத்துவச் சிகிச்சை பெறும் வகையில் ’ஆயுஷ்மான் பாரத்’ என்ற திட்டம் மத்திய அரசால் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதைப் பணம் செலவழிக்க தேவைப்படாத மருத்துவ காப்பீட்டுத் திட்டம் எனலாம். இந்த திட்டத்தில், இதுவரை 39 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர் சுகாதாரத் துறை கூறியுள்ளது.
Samayam Tamil personal-financeayushman-bharat-74-5-79_5


அதேபோல் சுமார் 18 ஆயிரம் மருத்துவமனைகள் ’ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் கீழ் மக்களுக்குச் சிகிச்சை அளிக்க ஒப்புக்கொண்டு தன்னை இணைத்துக் கொண்டது. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் மக்களின் சிகிச்சைக்காக ரூ. 7 ஆயிரத்து 500 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், ’ஆயுஷ்மான் பாரத்’ சேவையை வழங்குவதாகக் கூறிவரும் பல மருத்துவமனைகள் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், சிலர் மருத்துவமனைகளே இல்லாமலே சிகிச்சை அளித்ததுபோல பணம் பெற்று வருவதாகத் தொடர்ந்து திடுக்கிடும் புகார்கள் எழுந்தன.

இந்த விவகாரம் பல்வேறு விவாதங்களுக்கு உள்ளான நிலையில் இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் நிருபர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் போலியான தகவல்களை அளித்து சுமார் ஆயிரத்து 200 பேருக்குச் சிகிச்சை வழங்கப்பட்டதாகப் பல மருத்துவமனைகள் பணம் பெற்றுள்ளது. இது தொடர்பாக 376 மருத்துவமனைகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இது தவிர 338 மருத்துவமனைகள் மீது இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது தவிர 6 மருத்துவமனைகள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. சில மருத்துவமனைகள் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட்டதால் ரூ. ஒன்றரைக் கோடி அபராதம் போடப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைந்திருந்த 97 மருத்துவமனைகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். மேலும் அமைச்சர் ஹர்ஷவர்த்தன், “அரசுத் திட்டங்களில் ஊழல் நடப்பதைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது. எங்களிடம் உள்ள தகவல் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு மோசடியில் இயங்கும் மருத்துவமனைகளை எளிதாகக் கண்டறிந்து விடுவோம்.” என ஆவேசமாகக் கூறினார்.

மத்திய அரசுத் திட்டத்திலே இவ்வளவு பெரிய மோசடி நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எனினும், தக்க சமயத்தில் மத்திய அமைச்சர் மோசடி குறித்து உரிய விளகத்தை அளித்துள்ளது பல தரப்பினரால் வரவேற்கப்படுகிறது.

இனி வரும் நாட்களில், தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள மருத்துவமனைகளின் விவரங்கள் ’ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் தொடர்பாகச் செயல்படும் அதிகாரப் பூர்வ இணையத்தளத்தில் மோசடி மருத்துவமனைகள் என விளம்பரப்படுத்தப்படும் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி