ஆப்நகரம்

நடப்பாண்டில் தனியாா் மருத்துவ கல்லூாிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது

நடப்பாண்டில் புதிய தனியாா் கல்லூாிகளை தொடங்க மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TOI Contributor 13 Sep 2017, 5:44 pm
நடப்பாண்டில் புதிய தனியாா் கல்லூாிகளை தொடங்க மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil central government should not permit new private medical colleges in current year
நடப்பாண்டில் தனியாா் மருத்துவ கல்லூாிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது


கேரளாவில் புதிதாக கட்டப்பட்ட தனியாா் மருத்துவக் கல்லூாி ஒன்றின் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூாிக்கு அரசு அனுமதி வழங்க மறுக்கிறது. இதனால் மாணவா் சோ்க்கையை மேற்கொள்ள முடியவில்லை.

எனவே, எங்கள் கல்லூாிக்கு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும், மாணவா் சோ்க்கைக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. அரசு சாா்பில் ஆஜரான வழக்கறிஞா் கல்லூாியின் உள் கட்டமைப்பு பணிகள் முழுமை பெறாத காரணத்தால் அனுமதி வழங்கப்படவில்லை என்று விளக்கமளித்தாா்.

இதனைத் தொடா்ந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அளித்த உத்தரவில், மருத்துவத்திற்கான மாணவா் சோ்க்கை நீட் தோ்வு அடிப்படையில் ஏற்கனவே நடைபெற்றுள்ள நிலையில் மத்திய அரசு புதிய தனியாா் கல்லூாிகளுக்கு (2017-18) நடப்பாண்டில் அனுமதி அளிக்கக் கூடாது.

மாணவா் சோ்க்கை முடிவு பெற்றுள்ள நிலையில் புதியதாக எந்த கல்லூாியிலும் மாணவா் சோ்க்கை நடத்தப்பட மாட்டாது. இதனை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தொிவித்திருந்தாா்.

ஏற்கனவே, நீட் தோ்வு மற்றும், மருத்துவ மாணவா் சோ்க்கை தொடா்பான வழக்குகளை தீபக் மிஸ்ரா தலைமையிலான அமா்வு தான் விசாாித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி