ஆப்நகரம்

Rafale deal: ரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!

ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் விவகாரத்தில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

Samayam Tamil 27 Oct 2018, 10:23 am
ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் விவகாரத்தில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
Samayam Tamil rafale


கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என முன்னாள் பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

'பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க 2015ல் பிரதமர் மோடி ஒப்பந்தம் செய்தார். அதில் பல்வேறு ஊழல் நடந்துள்ளது. இதற்கு முகாந்திரங்கள் உள்ளது.

பிரதமர் மோடி தன்னுடைய அலுவலகத்தைப் பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாயை தனியார் நிறுவனம் பயன் பெற உதவியுள்ளார். இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி 4ம் தேசி சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவிடம் மனு அளித்தோம்.

ரஃபேல் ஊழல் குறித்து சிபிஐ விசாரணை: உச்ச நீதிமன்றத்தில் மனு!

ஆனால், சிபிஐ அமைப்புக்கு மறைமுகமாக,நேரடியான அழுத்தங்களை அரசு அளித்துள்ளது. சிபிஐ இயக்குநர், துணை இயக்குநர் திடீரென மாற்றப்பட்டது சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அதனால் உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும்” என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது தொடர்பாக நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடந்தது. இதற்கிடையில், தற்போது, ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் விவகாரத்தில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ரஃபேல் விவகாரத்தில் ஒப்பந்த நடைமுறை, விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து அறிக்கை ஒன்றை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி