ஆப்நகரம்

நாட்டின் இரண்டாவது தலைநகரம் தென்னிந்தியாவில் அமைக்கப்பட உள்ளதா? - நாடாளுமன்றத்தில் ருசிகர விவாதம்

நாட்டிற்கு இரண்டாவது தலைநகரத்தை உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Samayam Tamil 28 Nov 2019, 12:25 am
நாட்டின் இரண்டாவது தலைநகரம் தென்னிந்தியாவில் அமைகிறதா என்பது குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று ருசிகர விவாதம் நடைபெற்றது.
Samayam Tamil nr


நாட்டின் தலைநகராக டெல்லி தற்போது திகழ்ந்து வருகிறது. நீதித் துறையின் மிக உயரிய அமைப்பான உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம் உள்ளிட்டவை இங்குதான் அமைந்துள்ளன.

அத்துடன் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட நாட்டின் உயர்ந்த பதவிகளை வகிப்பவர்களின் அதிகாரப்பூர்வ இல்லங்களும் டெல்லியில் தான் அமைந்துள்ளன.

மாநிலங்களவையில் வரலாற்று சிறப்புமிக்க தருணம்- 250வது கூட்டத்தொடரில் மோடி பெருமிதம்!

இதனால், அரசு நிர்வாகம், வழக்கு தொடர்பான விஷயங்களுக்காக, ஜம்மு -காஷ்மீரில் இருந்து நாட்டின் கடைகோடி பகுதியான கன்னியாகுமரி வரையில் உள்ள குடிமகன்கள், ஏதாவதொரு கட்டத்தில் தலைநகர் டெல்லிக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் பணம், நேர விரயத்தை தவிர்க்கும் பொருட்டு, நாட்டில் இரண்டாவது தலைநகரம் ஒன்றை ஏற்படுத்தலாம் என்ற கருத்து பரவலாக இருந்து வருகிறது.

இந்தக் கருத்தை பிரதிபலிக்கும் விதத்தில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.யான டாக்டர் கே.வி.ராமசந்திர ராவ், "நாட்டிற்கு இரண்டாவது தலைநகரம் அவசியம் தேவை எனவும், அதனை தென்னிந்தியாவில் அமைக்கும் எண்ணம் உள்ளதா? ஆமென்றால் அதற்குரிய விளக்கம் வேண்டும்" என கேள்வியெழுப்பினார்.

சபாநாயகருக்கு அருகே நிற்கும் மார்ஷல்களை தெரியுமா? இவர்கள் சீருடை மாற்றத்தை கவனித்தீர்களா?

இதற்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் அளித்த பதிலில், " நாட்டில் இரண்டாவது தலைநகரை உருவாக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை. எனவே, இவ்வாறு கேள்வி எழுப்புவது தேவையற்றது" என அமைச்சர் பதிலளித்தார்.

தமிழகத்திவ் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, மாநிலத் தலைநகரை சென்னையிலிருந்து திருச்சி மாற்றலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதும், தமிழகத்தின் மையப்பகுதியாக திருச்சி மாநகரம் திகழ்வதால் இப்படியொரு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி