ஆப்நகரம்

உயிருக்கு ஆபத்தான ’புளூ வேல்’ விளையாட்டு; தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை...!

ஆபத்தான புளூ வேல் விளையாட்டை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

TNN 16 Aug 2017, 8:25 am
டெல்லி: ஆபத்தான புளூ வேல் விளையாட்டை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Samayam Tamil central govt asked to stop blue whale game
உயிருக்கு ஆபத்தான ’புளூ வேல்’ விளையாட்டு; தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை...!


ரஷ்யாவைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ’புளூ வேல்’ என்ற ஆன்லைன் விளையாட்டை உருவாக்கினார். இது 50 நாட்கள் விளையாடக் கூடிய சவால். இதன் இறுதி சவாலாக கூறப்படுவது ‘தற்கொலை செய்து கொள்வது’.

உலகம் முழுவதும் ஏராளமான நாடுகளில், இந்த விளையாட்டு வைரலாக பரவியது. விபரீதமான தற்கொலை முடிவையும் சிலர் மேற்கொண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதனால் உலகம் முழுவதும் ஏராளமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த விளையாட்டு தற்போது இந்தியாவில் காலடி எடுத்து வைத்துள்ளது. இதையடுத்து ஆங்காங்கே மாணவர்களும், இளைஞர்களும் விபரீத முடிவுகளை எடுக்க முற்படுகின்றனர்.

இந்நிலையில் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேச மாநிலங்களில் இதுவரை 3 சிறுவர்கள் விளையாட்டின் காரணமாக தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆபத்தான புளூ வேல் விளையாட்டின் இணைப்புகளை நிறுத்துமாறு, கூகுள், பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்ட்ராகிராம், மைக்ரோசாப்ட், யாகூ போன்ற இணையதள மற்றும் சமூகவலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

Central Govt asked to stop Blue Whale game.

அடுத்த செய்தி