ஆப்நகரம்

மழைகால கூட்டத்தொடருக்கு முன்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் நியமனம்?

மழைகால கூட்டத்தொடருக்கு முன்னதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநரை நியமிக்கக் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TNN 22 Jun 2016, 4:12 pm
புதுதில்லி: மழைகால கூட்டத்தொடருக்கு முன்னதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநரை நியமிக்கக் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil central govt decides to appoint rbi governor before parlys monsoon session reports
மழைகால கூட்டத்தொடருக்கு முன்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் நியமனம்?


ரிசர்வ் வங்கியின் ஆளுநராக ரகுராம் ராஜன் மீண்டும் நியமிக்கப்படுவது குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வந்தது. அவரை பதவி காலம் செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் நிலையில், அவரை பதவி நீட்டிக்க கூடாது என பாஜக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக அவர், பிரதமருக்கும் கடிதம் எழுதியிருந்தார்.

இதனிடையே, ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன், தனது பதவி காலத்தை நீட்டிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார். ரிசர்வ் வங்கியின் ஆளுநராக ரகுராம் ராஜன் இல்லையெனில் இந்திய பொருளாதாரதிற்கு வீழ்ச்சி என பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளனர். அதேசமயம், ரகுராம் ராஜனின் இந்த முடிவு பல்வேறு தரப்பினரையும் வருத்தமடைய செய்துள்ளது.

இந்நிலையில், மழைகால கூட்டத்தொடருக்கு முன்னதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநரை நியமிக்கக் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் வருகிற ஜூலை மாதம் 21-ம் தேதி துவங்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற தகவல்கள் வெளியாகியுள்ள விஷயம் முக்கியத்துவம் பெறுகிறது.

அடுத்த செய்தி