ஆப்நகரம்

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ரத்து: மத்திய அரசு அதிரடி..!

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 1 Jun 2021, 7:45 pm
கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் மாணவர்களின் உயிரை கருத்தில்கொண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.
Samayam Tamil கோப்புப்படம்


இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொது தேர்வுகளை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொரோனா சூழலில் மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஒரு நாளைக்கு 1 கோடி பேருக்கு தடுப்பூசி போட திட்டம்! எப்போதிலிருந்து தெரியுமா?

இதனால் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதால் மதிப்பெண்கள் மதிப்பீடு செய்வது குறித்த விவரம் விரைவில் வெளியாகவுள்ளது.

அடுத்த செய்தி