ஆப்நகரம்

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்? - மத்திய அரசின் திட்டம் என்ன?

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில், பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்று அனைவரும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதுதொடர்பாக மத்திய அரசின் திட்டம் பற்றி இங்கே காணலாம்.

Samayam Tamil 27 May 2020, 12:54 pm
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு பலகட்டங்களாக அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தியதாக தெரியவில்லை. இதற்கிடையில் நான்காம் கட்ட ஊரடங்கு வரும் 31ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.
Samayam Tamil பள்ளிகள் திறப்பு


குறிப்பாக ஹிந்தி மொழி செய்தி தொலைக்காட்சி ஒன்றில், பள்ளிகள் திறக்கப்படுவது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று நேற்று செய்தி ஒளிபரப்பியதாக கூறப்படுகிறது.

இதுபற்றி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், இதுதொடர்பாக எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. நாடு முழுவதுமுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்க தற்போது வரை அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறப்பு?

கடந்த மார்ச் மாதத்தின் மத்தியில் இருந்து பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சில கல்வி நிறுவனங்கள் ஊரடங்கு அறிவிப்பை தொடர்ந்து மார்ச் 25ஆம் தேதியில் இருந்து மூடப்பட்டிருக்கின்றன. தற்போது வரை கொரோனா வைரஸின் தாக்கம் குறையவில்லை.

முதல்கட்டமாக மார்ச் 24ஆம் தேதி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதாவது மே 3ஆம் தேதி வரையிலும், பின்னர் மே 17ஆம் தேதி வரையிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டன. இதையடுத்து மே 31ஆம் தேதி வரை நீட்டக்கப்பட்டது.

கொரோனா தொற்று பரவலிற்கு ஏற்ப சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, பச்சை உள்ளிட்ட மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. எனவே முதலில் பச்சை, பின்னர் ஆரஞ்சு என மண்டல வாரியாக வரும் ஜூலை மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

அதேசமயம் முதல்கட்டமாக 8 முதல் 12ஆம் வகுப்பு வரை மட்டும் பள்ளிகள் திறக்கப்படும். அதன்பிறகு 8ஆம் வகுப்பிற்கு கீழுள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஜூன் 1 முதல் வழக்கம்போல நீதிமன்றங்கள் இயங்க உத்தரவிடுக: பார் கவுன்சில்

நடப்பு மாதத்தின் தொடக்கத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பல்வேறு பள்ளி ஆசிரியர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினார். அப்போது முதலில் வகுப்புகள் 30 சதவீத மாணவர்களுடன் நடத்த ஏற்பாடு செய்யலாம் என்று திட்டமிட்டு வருவதாக கூறினார்.

அடுத்த செய்தி