ஆப்நகரம்

2.8 லட்சம் புதிய ஊழியர்களை பணியமர்த்த இருக்கும் மத்திய அரசு!

2.8 லட்சம் புதிய ஊழியர்களை பணியமர்த்த இருக்கும் மத்திய அரசு!

TNN 2 Mar 2017, 12:55 pm
டெல்லி : மத்திய அரசு அலுவலகங்களுக்கு 2.8 லட்சம் பேரை பணியமர்த்த வேண்டும் என்று மத்திய அரசு தனது பட்ஜெட் அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது. அதில் காவல்துறை, வருமான வரித்துறை, சுங்க மற்றும் மத்திய கலால் வரித்துறைக்கு மட்டும் 1.8 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். வருமான வரித்துறையானது பண மதிப்பு இழப்பு அறிவிப்பிற்கு பிறகு தங்களின் துறையில் பணியாளர்களை புதிதாக நியமிக்க திட்டமிட்டுள்ளது. தற்போது 46,000 வருமான வரித்துறையில் பணியாற்றி வரும் நிலையில் மார்ச் இறுதிக்குள் 80,000 பேர் வரை நியமிக்க திட்டமிட்டுள்ளனர்.
Samayam Tamil central govt to hire 2 8 lakh more staff police i t customs to get lions share
2.8 லட்சம் புதிய ஊழியர்களை பணியமர்த்த இருக்கும் மத்திய அரசு!


அதே போன்று சுங்க மற்றும் கலால் துறையினரும் பணியாளர்களை நியமிக்க உள்ளனர். தற்போது சுங்க மற்றும் கலால் துறையில் 50,600 பேர் பணியாற்றி வரும் நிலையில் 91,700 பேராக உயர்த்த உள்ளனர். இந்தியாவில் அதிக பணியாளர்களை கொண்டுள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயில் கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாளர்கள் அதிகமாக நியமிக்கப்படவில்லை. 13.31 லட்சம் பேர் தான் பணியாற்றிவருகின்றனர். 2016ஆம் ஆண்டு 1.88 லட்சம் பேரை பணியமர்த்த மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால் புதியவர்களை எவரையும் வருமான வரித்துறை, சுங்க மற்றும் கலால் துறைகளில் நியமிக்கவில்லை.

பிரதமர் மோடி வெளியுறவுக்கொள்கையில் ஆர்வமுடையவர் என்பதால் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் மேலும் 2000 பேரை பணியமர்த்த உள்ளனர். அதே போல் உளவுத்துறையிலும் 2250 பேர் புதிதாக பணியமர்த்தப்பட உள்ளனர்.

அடுத்த செய்தி