ஆப்நகரம்

யார் அந்த கருப்புச் சட்டை? ஆர்.எஸ்.எஸ் விஜயதசமி நிகழ்ச்சியில் குவிந்த பிரபலங்கள்!

நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்திய விஜயதசமி நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Samayam Tamil 8 Oct 2019, 10:56 am
நாடு முழுவதும் இன்று விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. சில பகுதிகளில் தசரா பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் விஜயதசமியை ஒட்டி, ஆர்.எஸ்.எஸ் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
Samayam Tamil RSS


இதில் நிகழ்த்தப்படும் உரைகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இவை பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திடும் வகையில் இருக்கும். இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் விஜயதசமி பண்டிகையை ஒட்டி, நிகழ்ச்சி ஒன்றிற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் சிவப்பு கம்பள அழைப்பு விடுத்துள்ள ஜம்மு -காஷ்மீர்!

அதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வங்கியில் 8 லட்சம், வீட்டில் 1.5 லட்சம்.. விபத்தில் இறந்த பணக்கார பிச்சைக்காரர்..

சிறப்பு விருந்தினராக எச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார் பங்கேற்றார். மேலும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டு, தலைவர்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

சிவசேனாவில் இருந்து ஒருவர் மகாராஷ்டிர முதல்வராவார்: உத்தவ் தாக்கரே உறுதி

முன்னதாக ஆர்.எஸ்.எஸ் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இதனை சிறப்பு விருந்தினர் ஷிவ் நாடார் பார்வையிட்டார்.

அடுத்த செய்தி