ஆப்நகரம்

நடந்து வந்த விவசாயிகளை ரயிலில் வீட்டுக்கு அனுப்பும் பட்னவிஸ்

கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நடைப் பயணமாக மும்பை வந்த விவசாயிகள் வீடுதிரும்ப இரு சிறப்பு ரயில்கள் இன்று இயக்கப்படுவதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் அறிவித்துள்ளார்.

Samayam Tamil 12 Mar 2018, 6:37 pm
கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நடைப் பயணமாக மும்பை வந்த விவசாயிகள் வீடுதிரும்ப இரு சிறப்பு ரயில்கள் இன்று இயக்கப்படுவதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் அறிவித்துள்ளார்.
Samayam Tamil central railway to run two special trains from mumbais csmt to bhusawal
நடந்து வந்த விவசாயிகளை ரயிலில் வீட்டுக்கு அனுப்பும் பட்னவிஸ்


விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிஸான் சபா அமைப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கிலிருந்து மும்பை நோக்கி கடந்த வாரம் நடைப்பயணம் தொடங்கினர்.

இதில் சுமார் 30, 000 மேற்பட்ட விவசாயிகள் 180 கி.மீ தொலைவுக்கு நடந்தே வந்தனர். இன்று மும்பையை அடைந்த அவர்கள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸைச் சந்தித்து தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.

இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மகாராஷ்டிர முதல்வர் பட்னவிஸ், விவசாயிகளின் பெரும்பான்மையான கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன என்றும் அரசின் வாக்குறுதிகள் அவர்களுக்கு எழுத்துப்பூர்வமாகவும் எளிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
Central Railway to run two special trains from Mumbai's CSMT to Bhusawal at 8.50 pm and 10.00 pm today to send the agitating farmers back. — ANI (@ANI) March 12, 2018 மேலும், விவசாயிகள் திரும்பிச்செல்ல வசதியாக மும்பை முதல் புசாவல் வரை இரண்டு சிறப்பு ரயில்கள் இன்று இரவு 8.50 மணிக்கும் 10 மணிக்கும் இயக்கப்படும் என்றும் பட்னவிஸ் அறிவித்துள்ளார்.

அடுத்த செய்தி