ஆப்நகரம்

ஜனவரி 8ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம்; மத்திய தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

தொழிலாளர்களின் உரிமைகளுக்கு எதிரான, கார்பரேட் நிறுவன எஜமானர்களின் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து பாடுபடுவதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன

Samayam Tamil 30 Sep 2019, 7:00 pm
டெல்லி: தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 8ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறிய மத்திய அரசுக்கு எதிரான இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

தங்களுடைய 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ள தொழிற்சங்கங்கள், மத்திய அரசு உழைக்கும் மக்களின் உண்மையான கோரிக்கைகளுக்கு செவிமடுக்க தவறிவிட்டதாகவும், தொழிலாளர்களின் உரிமைகளுக்கு எதிரான, கார்பரேட் நிறுவன எஜமானர்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளன.

அனைத்து பிரதிநிதித்துவங்களிலும் ஐ.என்.டி.யூ.சி.வை பாஜக அரசு பழிவாங்குவதாகவும், கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின்னர் எந்தவொரு தொழிலாளர் மாநாடும் நடத்தப்படவில்லை எனவும் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி