ஆப்நகரம்

புற்றுநோய் அபாயம் கொண்ட இ-சிகரெட்களுக்கு தடை; மத்திய அரசு அறிவுறுத்தல்!

குழந்தைகள், பெண்கள், இளவயதினரின் நலன் காக்க இ-சிகரெட்களை தடை செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

TIMESOFINDIA.COM 29 Aug 2018, 2:28 am
புதுடெல்லி: குழந்தைகள், பெண்கள், இளவயதினரின் நலன் காக்க இ-சிகரெட்களை தடை செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil e-cigaratte


இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தல் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ENDS எனப்படும் எலக்ட்ரானிக் நிகோட்டின் டெலிவரி சிஸ்டத்தை தடை செய்ய வேண்டும்.

அதில் இ-சிகரெட்கள், ஹீட்-நாட்-பர்ன் டிவைசஸ், வேப், இ-ஷீஷா, இ-நிக்கோட்டின் அடங்கிய ஹூகா மற்றும் நிகோட்டின் அடங்கிய அனைத்தையும் தடை செய்ய வேண்டும். இது அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கும் பொருந்தும்.

இந்த கடிதம் பொது நலன் கருதியும், குழந்தைகள், இளவயதினர், கருவுறும் பெண்கள் ஆகியோரின் நலனிற்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பொருட்களின் விற்பனையை மட்டுமல்லாது, தயாரிப்பு, விநியோகம், வர்த்தகம், ஏற்றுமதி, விளம்பரம் ஆகியவற்றையும் தடை செய்ய வேண்டும்.

சமீபத்தில் நாடு முழுவதும் இ-சிகரெட்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருவதை டெல்லி உயர்நீதிமன்றம் சுட்டிக் காட்டியது. எனவே இவற்றை தடை செய்ய முறையான வழிகாட்டுதல்கள் உடன் அறிக்கை தாக்கல் செய்யும் படி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்தே அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ENDSல் புற்றுநோய் உண்டாக்கும் விஷயங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இவை ஒருபோதும் புகையிலைப் பொருட்களுக்கு மாற்றாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிபுணர்கள் கூறுகையில், இ-சிகரெட்கள் எனப்படுபவை கவர்ச்சிகரமான வகையில் நிகோட்டினை வழங்கும் தொழில்நுட்பம் என்கின்றனர்.

Centre asks states to ban e-cigarettes.

அடுத்த செய்தி